Posts

Showing posts from May, 2021

காதல் கவிதை

கண்ணிமை மூடினால் என் நினை நீீீீயடி, என் மனம் சுத்துதே உன்னையே தாணடி, உயிரென தாங்குவாய் என்னவள் நீயடி, என்றுமே நீயடி என் இரண்டாம் தாயடி... --புலவர்மைந்தன்

மணநாள் வாழ்த்து

ஒன்றாகி ஓடிய ஒன்பது ஆண்டுகள், இன்றாகி போலவே இனிய நம் நினைவுகள், என்றாகி(என்றுமாகி) வேண்டிடும் என் உயிர் நுண்துகள்.., அன்பாலே மலர்ந்த நம் அதிரலாம் அடுக்ககம், நீளட்டும் மலர்ச்சியாய் என்றுமே நம்மாலே.. -- புலவர்மைந்தன்

என்னவளின் அன்பு! பிறந்தநாள் கவிதை.

 ஒரு பொருள் இருவேறு பரிணாம கவிதைகள்: கவிநடை: ஆயிரம் தேவதை ஓய்வு நாள் இன்று, மலர்களும் மலர்ந்திட மறந்தன அன்று, பேதயாய் பெதும்பயாய் மங்கயாய் நின்று, ஆதலால் காதலால் என்னகம் சென்று, தற்காத்துத் தற்கொண்டாற் பேணியே நின்று, தகைசான்ற - சொற்காத்துச் சோர்விலா சுரிகுழல் நீ என்று, தென்றலின் எளிய நின் உளம் போல் அகன்று, கரைசேருமே என்வாழ்வு உன்னுடன் இணைந்து.. ஹைக்கூ: ஓராயிரம் தேவதை ஓய்வு நாள், ஈராயிரம் மலர்கள் மெய்மறந்த நாள், அது - என்னவளின் பிறந்த நாள்.. -- புலவர் மைந்தன்

அம்மா! அம்மா!!

கருவறை இருட்டில்  உயிர் விளக்கேற்றி, உதிரத்தை உருக்கி உணவாய் அளித்து, வலி பல கடந்து உயிராய் திரித்து, உறக்கம் தொலைத்து இமைக்க மறந்து, அவயத்து நிறுத்தினாய் முன்னே! தாயவள் தாய்மடி தவழும் ஓர் குழந்தையாய்  என்றுமே உன்னடியில் நான்! --புலவர் மைந்தன்

தந்தை அன்பு

வெளிகொடா, என்றும் வெளிப்படா, யாரும் வழிபடா, நிதானம் - தந்தை அன்பு! -- புலவர் மைந்தன்