அம்மா! அம்மா!!
கருவறை இருட்டில்
உயிர் விளக்கேற்றி,
உதிரத்தை உருக்கி
உணவாய் அளித்து,
வலி பல கடந்து
உயிராய் திரித்து,
உறக்கம் தொலைத்து
இமைக்க மறந்து,
அவயத்து நிறுத்தினாய்
முன்னே!
தாயவள் தாய்மடி தவழும் ஓர் குழந்தையாய்
என்றுமே உன்னடியில் நான்!
--புலவர் மைந்தன்
Comments
Post a Comment