என்னவளின் அன்பு! பிறந்தநாள் கவிதை.

 ஒரு பொருள் இருவேறு பரிணாம கவிதைகள்:


கவிநடை:

ஆயிரம் தேவதை ஓய்வு நாள் இன்று,

மலர்களும் மலர்ந்திட மறந்தன அன்று,

பேதயாய் பெதும்பயாய் மங்கயாய் நின்று,

ஆதலால் காதலால் என்னகம் சென்று,

தற்காத்துத் தற்கொண்டாற் பேணியே நின்று,

தகைசான்ற -

சொற்காத்துச் சோர்விலா சுரிகுழல் நீ என்று,

தென்றலின் எளிய நின் உளம் போல் அகன்று,

கரைசேருமே என்வாழ்வு உன்னுடன் இணைந்து..


ஹைக்கூ:

ஓராயிரம் தேவதை ஓய்வு நாள்,

ஈராயிரம் மலர்கள் மெய்மறந்த நாள்,

அது - என்னவளின் பிறந்த நாள்..


-- புலவர் மைந்தன்

Comments

Popular posts from this blog

பதிமூன்று ஆண்டு மணநாள் வாழ்த்துக்கள்

2025 - அம்மா பிறந்த நாள் வாழ்த்து

வானவில்லே வணங்கிடும் நிறங்கள்!